இலங்கையிலுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது.
அதனடிப்படையில், சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.
இதற்காக செஞ்சிலுவை சங்கத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.
இதில் இலங்கை சார்பில் வௌிவவகார அமைச்சு கைச்சாத்திட உள்ளது.