தபால் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில்….

244 0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தபால் தொழிற்சங்கம்  அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடத்தவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அரசாங்கத்தின் வாக்குறுதிகளினால் ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும், அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படாமையினால்,  மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment