மின்னல் தாக்கி இருவர் மரணம்

245 0

வெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்திலுள்ள வயல் வெளியில் வேலைசெய்து கொண்டிருந்த இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (19) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகுல்பொகுன  பிரதேசத்தில் வசிக்கும் பரணவிதாரனகே லக்ஷான் (17), எலுவாதுர நிலன்த டி சொய்ஷா (36) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment