மருத்துவ பீட மாணவன் சடலமாக மீட்பு

293 0

328084167bodyசடலமாக மீட்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனின் அருகில் இருந்து 6 பக்கங்களிலான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நோய் நிலை காரணமாக மருத்துவ சிகிச்சைகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மாணவன் ஏதேனும் மருந்து வகையொன்றை உட்கொண்டதினாலேயே மரணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

27 வயதான குறித்த மாணவன் நேற்றைய தினம் கொழுப்பில் நொரிஸ் கெனல் பகுதியில் உள்ள விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.