இலங்கை 2017இல் வறுமையில் இருந்து விடுபடும் – ஜனாதிபதி

339 0

12017ஆம் ஆண்டு இலங்கை வறுமையில் இருந்து விடுபடும் வருடமாக பிரகடனம் செய்து விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளின் விருத்திக்காக புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக விஞ்ஞான ஆற்றலுடன் கூடிய இளைய சமூகத்தினருக்கு புதிய வேலைத்திட்டங்கள் பலவற்றை ஏற்படுத்திக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.