காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் மஹிந்தவுக்கு சந்தேகம்

328 0

kvqlfcjஅண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான ஆனைக்குழு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் நாடுபூராகவும் காணாமல் போனோர் தொடர்பில் பாதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

எனினும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலவலகத்தினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பில் மாத்திரமே ஆராயப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.