நல்லாட்சியில் சுயாதீனமாக செயற்பட முடியும் – நவீன்

315 0

78239_naveen-dissanayaka-720x480-720x480நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்தினரில் பலருக்கு செவிசாய்த்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.