காவிரி பிரச்சினை – தமிழகத்திற்கு எதிராக பிரசாரம் வேண்டாம் – கர்நாடக முதல்வர் வேண்டுகோள்

349 0

chid_2987065fகாவிரி நீர் பிரச்சினையால் தமிழகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டிக்கும் வகையில் அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதேவேளை நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழகத்துக்கு தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் தமிழ் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் என்பனவற்றை முடக்கும் வகையிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படிருந்தன.

இந்நிலையில், தமிழகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை கன்னடர்களோ, கன்னட அமைப்புகளோ ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.