இன்று நாட்டில் ஏற்படவுள்ள வானிலை மாற்றம்..!

280 0

நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இன்று நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதிகளும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்பதுடன் தற்காலிகமாக கடும் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய, சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் பொலன்னறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment