திடீரென ஏற்பட்ட வௌ்ளத்தினால் சிறுமி ஒருவர் பலி

203 0

பஸ்ஸர, மெதவல பகுதியில் அடை மழையுடன் ஏற்பட்ட வௌ்ளத்தில் அடித்துச்சென்று 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெதவெலகம பாடசாலையில் 5 தரத்தில் கல்வி கற்கும் மெதவெல, எகொடகம பகுதியை சேர்ந்த நிம்சரணி ரஸ்மிதார எனும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) மாலை 3 மணியளவில் குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு சென்று தனது தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட வௌ்ளத்தினால் இவர்கள் இருவரும் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தாயை காப்பாற்றியுள்ளதுடன் குறித்த சிறுமி உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment