ரணிலை விட ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரதமர் பதவியே முக்கியம்- நவீன்

204 0

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு நிச்சியம் தண்டனை கிடைக்கப்பெறும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சிக்காக எதனையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், ரணில் விக்ரமசிங்கவை விடவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் பதவியே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக்காலத்தில் மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டு ஐக்கிய தேசிய கட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயந்து தவறிழைத்தவர்களுக்கு நிச்சியம் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் நவின் திசாநாயக்க குறிப்பிட்டார்.

Leave a comment