முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கிழக்கு மாகாண மக்களையும் பங்கேற்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுக்கவுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வடக்கு மாகாணசபையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, முதலமைச்சர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அனைத்துத் தரப்பினரையும் நினைவேந்தலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவுள்ளோம். அதே போன்று கிழக்கு மாகாணத்தின் சிவில் அமைப்புக்கள், மாணவர்கள், அரசியல் தரப்பினர் என்று சகலரையும் நினைவேந்தலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவுள்ளோம் என்று முதலமைச்சர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.