6 வயது சிறுமிக்கு சூடு வைத்த கொடூரம் – மாமி கைது

409 0

student_abuse_jk6 வயது சிறுமி ஒருவரின் காலிலும் உடம்பிலும் இரும்பு கம்பியை பழுக்க வைத்து சூடு வைத்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பெல்மடுல்ல – மேல்போபிட்டிய பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேல் போபிட்டிய தோட்ட பகுதியில் வசிக்கும் குறித்த சிறுமி நீண்ட காலமாக தனது மாமியுடன் வசித்து வருகிறார்.

குறித்த சிறுமியின் தாய், மறுமணம் செய்துகொண்டு தனியாக வாழ்ந்து வரும் நிலையில், தந்தை கொழும்பு பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாமியின் வீட்டில் வசித்து வந்த குறித்த சிறுமி நீண்ட காலமாக கொடுமைகளை சந்தித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலாங்கொட காவல்துறையினர் சிறுமியை பொறுப்பேற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிறுமியை ‘சிறுவர் காப்பகத்திற்கு’ அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.