யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை

426 0

mangala-samaraweeraஇலங்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கை, சர்வதேசத்தின் செயற்பாடுகளில் முக்கிய அங்கத்துவ நாடாக செயற்பட்டு வருதாகவும், எனினும் கடந்த ஆட்சிக்காலத்தில் சர்வதேசத்துடனான ஒத்துழைப்பிலிருந்து இலங்கை விலகி செயற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.