எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற விடுங்கள் – இரணைதீவு மக்கள்!

406 0

download-1எங்களுக்கு நீக்கள் வீடுகள் எதுவும் கட்டித்தரவேண்டாம், எங்களுடைய சொந்த நிலத்தில் குடியேற அனுமதியுங்கள் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள இரணைதீவிலிருந்து 240 குடும்பங்கள் நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக 1992ஆம் ஆண்டு  தமது பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்தனர்.

யுத்தம் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையிலும், தமது இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து 26 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது இன்னமும் தமது கிராமத்துக்கு மீளத் திரும்ப முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது சொந்த இடத்தில் தொழில் செய்வதற்கோ, மீளக் குடியேறுவதற்கோ தமக்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லையெனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.