தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் மீண்டும் அரசாங்கத்துடன் இணைய விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்க தாங்கள் தயார் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
16 பேரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறினாலும் அரசாங்கத்துடன் உள்ள 23 ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் கட்சியின் மேம்பாட்டுக்காக உழைப்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.