கிளிநொச்சி மாவட்ட குடிநீர் பிரச்சனைக்கு தற்காலிக தீா்வு!

320 0

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படக்கூடிய குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தற்காலிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக தீர்வுகளை வழங்க கூடியதாக உள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பூநகரி ஆகிய பகுதிகளில் தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த மாவட்ட அரச அதிபர் ……

அவர்கள் தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை. அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாக எங்களிடம் உள்ள பவுசர்கள் உழவு இயந்திர பவுசர்கள் என்பவற்றை பயன்படுத்தி தற்காலிகமாக தீர்வுகளை வழங்கமுடியும்.

அவ்வாறு பிரச்சனைகள் காணப்படுமாக இருந்தால் பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு அந்தப்பிரதேசங்களில் உள்ள தட்டுப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்துமிடத்து போதுமான அளவு தண்ணீரை பெற்றுக்கொள்ளக்கூடிய விநியோகிக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

இது தற்காலிக ஏற்பாடுகள் தான் நிரந்தர ஏற்பாடுகள் வரும் வரை இதனைச்செய்யமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment