தபால், ரயில்வே திணைக்களங்களை அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க திட்டம்

203 0

தபால் திணைக்களம் மற்றும் ரயில்வே திணைக்களம் என்பவற்றை அரசாங்கத்தின் நிருவாகத்திலிருந்து விடுவித்து சுயாதீன நிருவாக சபைகள் கொண்ட கூட்டுத் தாபனங்கள் இரண்டாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூட்டு தபால் தொழில்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

அமைச்சரவை உப குழுவொன்றின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அம்முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை விரைவாக நிறைவேற்ற அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a comment