பரசிடமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமி மரணம்!

321 0

பரசிடமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சிறுமிக்கு காய்ச்சலை ஏற்பட்டதால் தனியார் மருத்துவனைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசிப் பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு
மருத்துவர் கூறியுள்ளார்.

தாயார் பரசிட்டமோல் மாத்திரையை உடைத்து சிறுமிக்கு வழங்கிய
போது, அது தொண்டையில் சிக்கி, சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment