தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பலி

203 0

மஹியங்கனை, மாபாகடவெவ பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (21) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாபாகடவெவ பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான தாயும், அவரது 40 வயதான மகளும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Leave a comment