மெதிரிகிரிய, மீகச்வெவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த நபரை மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
தம்சொரபுர பகுதியை சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிழிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.