ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்-துமிந்த திசாநாயக்க

256 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்துவதற்கு தகுதியான நபர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார்.

அவரை மீண்டும் எமது நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற உர மானியம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குடும்பமாக செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தட்டுப்பாடின்றி உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு உர விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பில் விவசாய அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Leave a comment