வெலிகம, முதுகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெட்டுக்காயங்களுடன் பாதையில் விழுந்திருந்த இளைஞனை இன்று அதிகாலை பொலிஸார் வலான வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முதுகமுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.