சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது

212 0

சிறையிலிருந்த கணவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவியை கைது செய்துள்ளதுடன் அவரது வீட்டிலிருந்து ஒருத்தொகை கஞ்சாவை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி விவகாரம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த தனது கணவனுக்கு கொண்டு வந்த ஆடையை சேதணையிட்ட பொலிஸார் ஆடையினுள் மறைத்து வைத்திருந்த கஞ்சா பக்கட்டை மீட்டதையடுத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்னை கைது செய்த பின்னர் அவரது வீட்டை ஹட்டன் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் சோதனையிட்ட போது வீட்டுனுள்ளிருந்து மேலும்  ஒரு தொகை கஞ்சாவை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, ஹட்டன் மாவட்ட நீதின்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment