முன்னாள் முதல்வரை கண்டித்த இன்னாள் முதல்வர்!

206 0

யாழ் மாநகரசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) புதன்கிழமை காலை நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர்.

அதன்போது யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இருக்கையில் அமர்ந்திருந்தவாறு உரையாற்றினார். அவரது உரையின்பின் குறிப்பிட்ட யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் சபை உறுப்பினர்கள் சபையின் மான்பினைப் பேணும்வகையில் எழுந்துநின்று உரையாற்றவேண்டும் எனக் கூறினார்.

எனினும் அதற்கு உடனடியாகப் பதிலளிக்காத முன்னாள் முதல்வர் ஜேகேஸ்வரி பற்குணராஜா சபை அமர்வு முடியும்போது தான் அண்மையில் காலில் சத்திரசிகிச்சை செய்துகொண்டதாகவும் அதனால்தான் எழுந்து நின்று உரையாற்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Leave a comment