மறவன்புலவு தற்கொலை அங்கி – இருவர் விடுதலை

328 0

chavakacheriசாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த ஐவரில் இருவரே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி அருண ஆட்டிக்கல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21பேரின் வழக்குகள் இன்று பிரதம நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவர்களில், கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் மீட்கப்பட்ட 5பேர் உட்பட மேலும் ஒருவரினதும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த இருவரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டதுடன் ஏனையவர்களை எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.