விமல் வீரவன்சவின் சகோதரரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

357 0

crqv_etwiaailh___1_-450x338நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து சரத் வீரவன்ச கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 21வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.