இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை

367 0

asylum-300x200இலங்கை அகதிகள் முகங்கொடுக்கின்ற இன்னல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் அக்கறை கொள்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிலவிய அச்சுறுத்தல்கள் காரணமாக பல இலங்கைத் தமிழ் அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசித்தனர்.

இவ்வாறு பிரவேசிப்பவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கரிசணை செலுத்தாது அவர்களை உடனடியாக மீண்டும் நாடு கடத்தும் செயற்பாடுகளே மேற்கொள்ளப்படுவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.