இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் – 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

373 0

photo_68236மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீதான தாக்குதலில் 15 பேர் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து அவர் தாக்கப்பட்டார்.

15 பேர் கொண்ட குழு ஒன்று வானூர்தி நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதி ஒன்றுக்கு அவரை அழைத்துச் சென்று தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு, தேடப்படுகின்றனர்.