இவ்வருட மே தின (மே 1) நிகழ்வுகளை மே மாதம் 7ம் திகதி மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பௌத்த மத தலைவர்களின் கோரிக்கைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 29 மற்றும் 30ம் திகதிகளில் வெசாக் போயா தினம் இடம்பெறுகின்றது. எனவே, குறித்த வாரம் வெசாக் வாரமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அதன்படி, மே மாதம் 01ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தொழிலாளர் தின நிகழ்வுகள் மே மாதம் 7 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.