அமைச்சர்கள், எம்.பி.க்கள் வெளிநாடு செல்லத் தடை

344 0

ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்றல் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள்  வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கு வாக்களிக்கப்பட வேண்டியுள்ளதனால், இவர்களின் வெளிநாட்டுப் பயணம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்பொழுது, வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் நாடு திரும்பும் படி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment