பான் கீ மூனின் அனுகூலக்கருத்துக்களை பயன்படுத்துவோம் – இலங்கை

287 0

unnamed-43ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை தொடர்பான சாதகமான கருத்துக்கள், மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனைக் கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பான் கீ மூன், இலங்கை தொடர்பான அனுகூலமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயங்கள் அனைத்தும், அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையினால் முன்வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.