தனி ஒருவரால் அரசாங்கத்தை மாற்ற முடியாது – ஜனாதிபதி

299 0

13483018_10154147960951327_3028904895550370128_oதனி ஒருவருக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறி ஜயவர்தனபுர – கோட்டே தொகுதியின் சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சி மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இதற்காக கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

தெளிவான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் கடந்த தேர்தல்களில் எதற்காக தோல்வி அடைந்தோம் என்று அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.