பாராத லக்ஸ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை

428 0

465முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளைஇய தினம் வழங்கப்படவுள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதிகளான ஷpரான் குணரத்ன,பத்மினி ரணவக்க குணதிலக, சீ.பீ.எஸ்.மொராயஸ் ஆகிய மூவர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் ஊடாக இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்ர உள்ளிட்ட நால்வர் இதன் போது படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன்,இந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் அங்கொட பிரதேசத்தில் வைத்து பாராத லக்ஸ்மன் உள்ளிட்டோர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.