ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுடன் இன்று (18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் பலரும் சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.