கட்சிக்குள் மாற்றம் வேண்டும்- ஜனாதிபதியிடம் ஸ்ரீ ல.சு.க. பிரபலங்கள் கோரிக்கை

204 0

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்களை மாற்றம் செய்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான மானசீக பலத்தை ஏற்படுத்த வேண்டும் என ஸ்ரீ ல.சு.க.யின் பிரபலங்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் தீர்மானங்களை எடுப்பதற்கான அதிக அதிகாரத்தை இளம் தலைவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு வேறு ஒர் அரசியல் கட்சியின் வெற்றிக்கு உழைக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்சியிலுள்ள பெரும்பாலானோரின் கருத்தாகும் எனவும் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment