சிறைச்சாலை வைத்தியசாலை மூடல்

228 0

சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்ட அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு கடந்த 15 ஆம் திகதி முதல் நோயாளர்களை அனுமதிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு போதியளவு ஊழியர்கள் இன்மையே இதற்குக் காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

எட்டு வைத்தியர்கள் தேவையான இடத்தில் ஒருவர் மாத்திரமே இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், 16 தாதியர்கள் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள இடத்தில் ஒரு தாதி மாத்திரமே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த அடிப்படையில், இச்சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 20 பேர் சிறைச்சாலைகளுக்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment