அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்ல உரிமை உண்டு- பொலிஸ்

320 0

மஹசொன் அமித்தின் மனைவிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு உரிமையுள்ளது. அது அவரின் தனிப்பட்ட உரிமை எனவும், அவரது முறைப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

அமித்தின் கைது குறித்து அவரது மனைவி நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது குறித்து பொலிஸாரின் நடவடிக்கை எதுவாக இருக்கும் எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவரின் மனைவிக்குள்ள உரிமையை அவர் மேற்கொள்கின்றார். பொலிஸாரின் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளும். ஆணைக்குழு வேண்டினால், நாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment