வைபருக்கான (Viber) தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்- அரசாங்கம்

270 0

கண்டி பிரதேசத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில், மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்படி, வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முகநுால், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment