அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று பூரண ஹர்த்தால் (காணொளி)

875 0

நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் அம்பாறை மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.

இதற்கமைய அம்பாறையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில், கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிங்கள் வாழும் பல பிரதேசங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களின் வீதிகளில் டயர் எரித்து போக்குவரத்திற்கு தடையேற்படுத்தி வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் ஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.

Leave a comment