நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

282 0

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி மழைபெய்யக் கூடிய நிலை காணப்படும் எனவும், வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் மழை எதிர்பார்க்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மி.மீ. மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment