அம்பாறை வன்முறை : முஸ்லிம் அமைச்சர்களுக்கு பிரதமர் இன்றும் அழைப்பு

260 0

அம்பாறை அசம்பாவிதம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சந்திப்புக்காக இன்று (03) மாலை 4.00 மணிக்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் நேற்றிரவு சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியவுடன் முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார். இச்சந்திப்பின் தொடராக இன்று மாலையும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment