லசந்த கொலை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

570 0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிரி ஆகியோரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு சந்தேகநபர்கள் சார்வில் ஆஜரான சட்டத்தரணிகள் வேண்டுகோள்விடுத்தனர். தமது தரப்பினர் கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் இதனை ஒரு விசேட காரணமாக கொண்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறும் குறித்த சட்டத்தரணிகள் கேட்டுள்ளனர்.

இருப்பினும், இரகசியப் பொலிஸார் இவர்களுக்கு பிணை வழங்குவதனை நிராகரித்துள்ளனர்.

இக்காரணங்களை விசாரணை செய்த நீதிமன்றம் இவர்களுக்கான பிணையை ரத்து செய்து மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Leave a comment