பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் சந்தேகம்- சிங்கள ராவய

354 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி சந்தேகநபர் அர்ஜுன் மஹேந்திரன் சிங்கப்பூரில் தங்கியுள்ள இடம்தொடர்பில் பிரதமரின் விஜயத்தின் பின்னர் புலனாய்வுத் துறைக்கு தகவல்கள் கிடைக்கும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படும் விதம் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.

Leave a comment