நிதி ஆபத்துக்களைக் கட்டுப்படுத்த நாடுகளுகிடையில் ஒருமைப்பாடு அவசியம் – மங்கள

312 0

நிதிசார் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையில் ஓர் இணக்கப்பாடு அவசியம் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான ஜி-24 நாடுகளின் தொழில்நுட்பக்குழுக் கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்காக ஒரு கொள்கை ரீதியான இணக்கப்பாடு அவசியம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் உதவி செய்வதற்காக உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கடந்த ஒக்டோபர் மாதம் கடனை சமநிலையில் பேணும் புதிய திட்டம் இந்தவருடத்தின் நடுப்பகுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்
இதன் மூலம் நிதிசார் ஆபத்துக்களை குறைக்கும் வல்லமை காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜி-24 பணியகத்தின் தற்போதைய தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-24 குழும நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சுக்களின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர் உட்பட 45ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment