பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் இப்பதவி வேறு ஒருவருக்கு மாற்றப்படும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

