நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலில் எந்த சபையில் எந்த கட்சி வெற்றிப் பெற்றிருந்தாலும் 167 சபைகளை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடமே இருப்பதாக கடற்றொழில் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மருதானையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

