இன்று அதிகாலை பஸ் குண்டு வெடிப்பு, நாட்டின் பாதுகாப்பு பூஜ்யத்துக்கு சென்றுள்ளது- சொய்ஷா

212 0

பண்டாரவளை கஹகொல்லவில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினர் நாட்டு மக்களுக்கு உண்மைத் தன்மையை விளக்கிக் கூற  வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

தற்பொழுது வரை நாட்டில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஒருவர் இல்லை. நாட்டின் பாதுகாப்பு பூஜ்யத்துக்கு இறங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment