அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் எத்தனை ஏமாற்றங்களை செய்யும் என்பது தெரியாது- மஹிந்த

227 0

அரசாங்கம் தருவதாக கூறிவிட்டு பாடசாலை மாணவர்களை ஏமாற்றக் கூடாது எனவும், இதேபோன்று அரசாங்கம் சென்றால் எதிர்வரும் நாட்களில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கூறமுடியாதுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் உயர் வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி வழங்கும் செயற்திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக கூறப்படுவது குறித்து அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒரு புறத்தில், பிரதமர் இன்னொரு புறத்தில், அமைச்சர்கள் பாரிச வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று வேறு ஓர் இடத்தில் உள்ளனர். நாடு ஸ்தீரமற்ற நிலையில் உள்ளது. இன்று அரசாங்கமொன்று இருக்கின்றதா? என்றும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. கேள்வி எழுப்பினார்.

Leave a comment