தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பில்லை – பாராளுமன்றம் ஒத்திவைப்பு

255 0

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிங்கள மொழியில் மாத்திரமே காணப்படுவதாகவும் ஆங்கில மொழியில் இல்லாததன் காரணமாகவும் குறித்த அறிக்கை தொடர்பிலான விவாதத்தை தொடர முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது மத்திய வங்கியின் பினைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு அறிக்கைகள் விவாதிக்கப்படவிருந்தன.

இதன்போதே பாரிய ஊழல் மோசடி அறிக்கையின் சிங்கள பிரதி மாத்திரமே உள்ளதாகவும் எனவே குறித்த விவாதத்தை தொடர முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறித்த அறிக்கை 8000 பக்கங்களை கொண்டதாக காணப்படுவதாகவும் அதனை மொழிபெயர்க்கும் வேலைகள் அரச கரும மொழிகள் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மேலும் குறித்த விவாதத்தை தொடர முடியாததன் காரணமாக சபைத்தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உத்தரவுக்கேற்ப பாராளுமன்றம் நாளை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

Leave a comment